உயிரைப் பறிக்கும் கொரோனா வைரஸ் தொற்று... எப்படி கண்டுபிடிப்பது? பரவாமல் தடுப்பது எப்படி?
samayam tamil | Updated: 23 Jan 2020, 03:28:26 PM
கொரோனா எனும் உயிர்கொல்லி
உலகையே அச்சுறுத்தலில் தள்ளியிருக்கிறது கொரோனா வைரஸ். இது சீனாவிலிருந்து தொடங்கி, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மிக வேகமாகப் பரவி வருகிறது. சீனாவில் பல உயிரிழப்புகளை ஏற்படுத்திய இந்த கொரோனா வைரஸ் ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் போன்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. புதிய உருமாற்றம் அடைந்து மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என்று சீனா உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வராமல் இருக்க முழு எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நாமும் கொஞ்சம் கவனத்தோடும் விழிப்புடனும் இருப்பது நல்லது தானே.கொரோனா எனும் உயிர்கொல்லி
உலகையே அச்சுறுத்தலில் தள்ளியிருக்கிறது கொரோனா வைரஸ். இது சீனாவிலிருந்து தொடங்கி, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மிக வேகமாகப் பரவி வருகிறது. சீனாவில் பல உயிரிழப்புகளை ஏற்படுத்திய இந்த கொரோனா வைரஸ் ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் போன்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. புதிய உருமாற்றம் அடைந்து மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என்று சீனா உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வராமல் இருக்க முழு எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நாமும் கொஞ்சம் கவனத்தோடும் விழிப்புடனும் இருப்பது நல்லது தானே.
கொரோனா வைரஸ் தொற்று
கொரோனா என்னும் கொடிய உயிர் குடிக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் உண்டாகும் என்று பார்க்கலாம்.
மூக்கு ஒழுகுதல்
தலைவலி
இருமல்
மேல் சுவாசக் கோளாறு
தொண்டை கரகரப்பு
காய்ச்சல்
உடல் சோர்வாக இருப்பது
போன்ற அறிகுறிகள் தான் ஆரம்பத்தில் இருக்கும். இவை வழக்கமாக இருப்பது தானே என அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. இந்த அறிகுறிகள் இருந்தால் முதல் மருத்துவரிடம் போய் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
வகைகள்
கொரோனா வைரஸ் என்பது ஒரே ஒரு வகை தான் என்றும் நினைக்காதீர்கள். அதற்குள்ளே பல வகைப்பாடுகள் உண்டு. அதில் இந்த வைரஸ் தொற்று நோய் ஏற்படுவதற்கு,
MERS - CoV coronavirus
SARS - CoV coronavius
229E - (Alpha coronavirus)
NL63 -(Alpha coronavirus)
OC43 (beta corona virus)
HKU1 (beta corona vius)
ஆகிய பிரிவுகளும் தான் இந்த கொடிய நோய் மனிதர்களுக்குப் பரவ காரணமாக அமைகின்றது.
என்ன செய்யும்?
மனிதர்களுக்குப் பரவக் கூடிய இந்த கொரோனா வைரஸ் தொற்றானது சில சமயங்களில் கடுமையான சுவாசக் கோளாறுகளை உண்டாக்கும்.
தொண்டையில் கடுமையான வலியை உண்டாக்கும்.
மார்புப் பகுதியில் லேசான வலி கூட சிலருக்கு இருக்கும்.
உடலை பலவீனப்படுத்தும்.
குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நோயெதிர்ப்பு மண்டலத்தையே பாதிக்கச் செய்யும்.
உங்கள் கருத்தை பதிவு செய்க
முக்கிய நிகழ்வுகளின் அப்டேட்டை அறிய தொடர்ந்து இருக்க வேண்டுமா?
மேலே உங்களது மெயில் ஐடியை பதிவு செய்து, செய்திகளின் அடுத்தடுத்த நிகழ்வுகளை பெற்றிடுங்கள்!
இந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:
Web Title : all you need to know about how to find coronavirus infection in tamil (Tamil News from Samayam Tamil , TIL Network)
அடுத்த செய்தி
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க என்ன பண்ணனும்? என்னலாம் பண்ணக் கூடாது?
samayam tamil | Updated: 23 Jan 2020, 01:52:42 PM
கொரோனா
உலகையே அச்சுறுத்தலில் தள்ளியிருக்கிறது கொரோனா வைரஸ். இது சீனாவிலிருந்து தொடங்கி, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மிக வேகமாகப் பரவி வருகிறது. சீனாவில் பல உயிரிழப்புகளை ஏற்படுத்திய இந்த கொரோனா வைரஸ் ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் போன்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. புதிய உருமாற்றம் அடைந்து மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என்று சீனா உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வராமல் இருக்க முழு எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நாமும் கொஞ்சம் கவனத்தோடும் விழிப்புடனும் இருப்பது நல்லது தானே.
எப்படி பரவும்?
மனிதர்களுக்குத் தொற்றக்கூடிய கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவுகின்ற தொற்று நோயாகவே இருக்கிறது. அது எப்படியெல்லாம் பரவும் என்று பார்க்கலாம்.
இருமல் மற்றும் தும்மலின் வழியாக ஒருவரிடமி இருந்து மற்றவருக்குப் பரவும்.
நோய்த்தொற்று இருப்பவர்களிடம் நெருக்கமாக இருப்பது, தொடுவது, கை குலுக்குவது ஆகியவற்றாலும் பரவும்.
வைரஸ் தொற்று தேங்கியிருக்கும் ஏதாவது பொருளைத் தொடுவதின் மூலம் பரவும்.
கண், வாய், மூக்கு ஆகியவற்றை கைகளைக் கழுவவதற்கு முன்பாகத் தொடுவதால் பரவும். மலக்கழிவுகளின் வாயிலாகவும் பரவும். இது மிக அரிதானது.
ஐக்கிய நாடுகளில்...
ஐக்கிய நாடுகளில் பெரும்பாலும் குளிர் காலத்தில் இதுபோன்ற கொடூரமான வைரஸ் தொற்றுக்கள் ஆண்டுதோறும் பரவுவது வழக்கமாகி விட்டது. ஐக்கிய நாடுகளில் உள்ளவர்கள் தங்களுடைய வாழ்நாளில் ஒருமுறையாவது இதுபோன்ற கொடுமையான வைரஸ் தொற்றுக்களுக்கு ஆளாகி விடுகிறார்களாம். குறிப்பாக இளம் சிறுவர்கள் நிறையவே மிக எளிதாக நோய்த் தொற்றுக்களுக்கு ஆளாகி விடுகிறார்கள்.
எப்படி பாதுகாத்துக் கொள்வது
தற்போது மனிதர்களுக்குப் பரவும் கொரோனா போன்ற தொற்று நோய்களுக்குத் தடுப்பூசிகள் கிடைக்கின்றன.
அடிக்கடி கையை சோப்பு போட்டு 20 நொடிகளாவது நன்கு தேய்த்துக் கழுவுங்கள்.
கைகளைக் கழுவாமல் உங்களுடைய கண்கள், மூக்கு மற்றும் வாய்ப்பகுதியைத் தொடுவதைத் தவிர்த்திடுங்கள்.
உடல் நலம் குன்றியவர்களிடம் நெருக்கமாக இருப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.
ஒருவேளை தொற்று பரவிவிட்டால்...
நோய்த்தொற்று இருப்பதாக உணர்ந்தாலோ அறிந்து கொண்டாலோ வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள்.
மற்றவர்களை உங்களுக்கு அருகில் நெருக்கமாக வைத்துக் கொள்ளாதீர்கள்.
சுற்றியுள்ள பொருள்களையும் இடங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.
தும்மல் மற்றும் இருமல் வரும்போது வாய் மற்றும் மூக்குப் பகுதியை துணி அல்லது டிஸ்யூ கொண்டு மூடிக் கொள்ளுங்கள்.
சிகிச்சை
மனிதர்களைத் தாக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்களுக்கு என்று தனியே குறிப்பிட்ட மருத்துவ முறைகள் ஏதும் கிடையாது. நாமே நம்மைப் பாதுகாத்துக் கொள்வதன் மூலமாகவே இந்த வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.
தற்காப்பு முறைகள்
வலி நிவாரணி மற்றும் காய்ச்சல் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகளாக இருநு்தால் ஆஸ்பிரின் போன்ற மருந்துகளைத் தவிர்த்து விடுங்கள்.
நீராவி கொண்டு ஆவி பிடியுங்கள். இருக்கும் இடத்தை கதகதப்பாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். சுடுதண்ணீரில் தினமும் இரண்டு முறையாவது குளிக்க வேண்டும்.
லேசாக முடியாதது போல உணர்ந்தீர்கள் என்றால், வெளியில் செல்லாமல் வீட்டி்ல இருந்தபடியே ஓய்வெடுங்கள். நிறைய நீர் ஆகாரங்களைச் சாப்பிடுங்கள்.
முக்கிய நிகழ்வுகளின் அப்டேட்டை அறிய தொடர்ந்து இருக்க வேண்டுமா?
மேலே உங்களது மெயில் ஐடியை பதிவு செய்து, செய்திகளின் அடுத்தடுத்த நிகழ்வுகளை பெற்றிடுங்கள்!
இந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:
Web Title : transmission and prevention of coronavirus infection in tamil (Tamil News from Samayam Tamil , TIL Network)